சென்னை-பாரிஸ் நேரடி விமான சேவையை நிறுத்துவதாக ஏர்-பிரான்ஸ் அறிவிப்பு

0 413

சென்னை - பாரிஸ் நேரடி விமான சேவையை மார்ச் மாதத்துடன் நிறுத்தப்போவதாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பேரிடருக்கு பின், கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னைக்கு நேரடி விமான சேவையை ஏர் பிரான்ஸ் தொடங்கியது.

தங்களது விமான சேவைகளை மேம்படுத்துவதற்காக, இந்த மார்ச்சுடன் சென்னைக்கான நேரடி விமான சேவையை நிறுத்தப்போவதாகவும், ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments