ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான சரக்குக் கப்பல் ஊழியர்களை மீட்ட இந்திய கடற்படை

0 246

ஏடன் வளைகுடா கடல் பகுதியில் ட்ரோன் தாக்குதலில் தீப்பிடித்த பார்படோஸ் நாட்டு சரக்குக் கப்பலில் இருந்த ஒரு இந்தியர் உள்ளிட்ட 21 ஊழியர்களை இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க் கப்பல் மீட்டுள்ளது.

பார்படோஸ் கப்பலில் இருந்து வெளியேறி கடலில் தத்தளித்த ஊழியர்களை ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்டதாகவும், அவர்களில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்த இந்தியக் கடற்படை, மீட்பு பணியில் ஈடுபட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments