வெள்ளி வியாபாரி கொலை வழக்கில் ஆயுதப்படை காவலர் உள்பட மேலும் 2 பேர் கைது

0 320

சேலத்தில் கடந்த மாதம் 2ஆம் தேதி வெள்ளி வியாபாரி சங்கர் என்பவரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கு தொடர்பாக சேலம் ஆயுதப்படை காவலர் உதயகுமார், திமுக பிரமுகர் ஆரிப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சங்கரின் மைத்துனர் சுபாஷ்பாபு, ரவுடி கோழிபாஸ்கர், வேலாயுதம் உள்ளிட்ட 8 பேரை ஏற்கனவே கைது செய்த போலீசார், கோழி பாஸ்கரை காவலில் எடுத்து விசாரித்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவலர் உதயகுமார் மற்றும் ஆரிப் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில்,  உதயகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments