சனாதன சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை தகுதி இழப்பு செய்ய உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்

0 302

சனாதன தர்மத்தை எய்ட்ஸ், கொரோனா, மலேரியா போன்ற நோய்களுடன் அமைச்சர் உதயநிதி ஒப்பிட்டு பேசியது, இந்துத்துவத்தை பற்றிய புரிதல் இல்லாததையே காட்டுவதாக நீதிபதி அனிதா சுமந்த் கருத்து தெரிவித்தார்.

சனாதன சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோரை தகுதி இழப்பு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் அனைத்து வழக்குகளையும் முடித்துவைப்பதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார்.

சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் இதுவரைக்கும் எதிலும் தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை எனக் கூறிய நீதிபதி அனிதா சுமந்த், முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்கள் மீது விளக்கமளிக்கும்படி உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments