217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக நபர்... நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல்

0 351

ஜெர்மனியில், 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கூறிய நபரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

அதிக முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் எவ்விதமான பாதிப்புகள் ஏற்படும் என அறிவியல் பூர்வமாக எவ்வித ஆய்வும் தெரிவிக்காத நிலையில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும் என ஒரு சில விஞ்ஞானிகள் மட்டும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அங்கு, 217 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக ஒருவர் கூறிவரும் நிலையில், அவர் 134 முறை தடுப்பூசி செலுத்தி உள்ளதாக அரசு பதிவுகள் உள்ளதால், அவரை பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், நோய் எதிர்ப்பு சக்தி எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் சிறப்பாக இயங்கிவருவதாக தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments