ஆட்டோக்கள் மூலம் குற்றச்சம்பவங்கள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆவணங்களின்றி இருந்த 13 ஆட்டோக்கள் பறிமுதல்

0 251

தேனியில் முறையான ஆவணங்கள் இல்லாததாலும், மதுபோதையில் ஓட்டுநர்கள் இருந்ததாலும் 13 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இரவு நேரங்களில் ஆட்டோக்கள் மூலம் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடப்பதாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் வெற்றி திரையரங்கு அருகே சோதனை செய்யச் சென்றபோது, பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தப்பி ஓடினர்.

அங்கிருந்த ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments