பதவி விலகாவிட்டால் உள்நாட்டு போர் வெடிக்கும்... ஹைத்தி பிரதமர்க்கு மிரட்டல் விடுத்த கடத்தல் கும்பல் தலைவன்

0 313

ஹைத்தி பிரதமர் ஏரியல் ஹென்ரி பதவி விலகாவிட்டால் உள்நாட்டு போர் வெடிக்கும் என கடத்தல் கும்பல்களின் தலைவன் ஜிம்மி செரிஸியர் மிரட்டல் விடுத்துள்ளான்.

பல்வேறு படுகொலை சம்பவங்களில் தொடர்புடையவனும், முன்னாள் காவல் அதிகாரியுமான ஜிம்மி செரிஸியர், கடந்த வாரம் 2 சிறைச்சாலைகளை தகர்த்து 3,000க்கும் மேற்பட்ட கைதிகளை தப்பிக்க வைத்தான்.

இதையடுத்து, வன்முறை சம்பவங்களை தடுக்க அங்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தலைநகர் போ ஓ பிரின்ஸின் 80 சதவீத பகுதிகளை அவன் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஆட்சியை கவிழ்க்க போவதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் சபதம் எடுத்தான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments