டிரம்ப் மீண்டும் அதிபரானால் நாட்டில் குழப்பமும், இருளும் சூழும் - ஜோ பைடன்

0 187

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டில் குழப்பமும் இருளும் சூழ்வதுடன், மக்களிடையே பிளவு ஏற்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

தனது ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வேலைவாய்ப்பு, பணவீக்கம், மருந்துகள் விலை, துப்பாக்கிக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றில் நாடு மேம்பாடு அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை டிரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனது ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்குத் தடை ஏற்படும், டிரம்புக்கு மனக்குறையும் மனக்கசப்பும் உள்ளதால், பதவியேற்ற பிறகு பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவார் என்றும் பைடன் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments