குழந்தை கடத்தல் நடப்பதாக பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் - நாகை எஸ்.பி. வேண்டுகோள்

0 285

நாகை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் நடப்பதாக போலி வீடியோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் எச்சரித்துள்ளார்.

கடந்த 2 நாட்களாக வட இந்திய இளைஞர்கள்குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எஸ் பி, குழந்தை கடத்தல் தகவல் வதந்தி என்றும், போலி வீடியோ பகிர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments