மதுரை மீனாட்சி அம்மன் கோயிவில் லட்டு விவகாரம் தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

0 317

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு தயாரிக்கும் பணியை திருஞானசம்பந்தர் மண்டபத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

பாடசாலை நடத்த கோயிலுக்குள் வேறு இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்கலாம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மதுரை ஆதினம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments