கூட்டணி கட்சிகளை கெஞ்சிக் கூத்தாடி தக்க வைக்கும் தி.மு.க.: ஜெயகுமார்

0 330

பா.ஜ.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் கழற்றி விட்ட பின் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளை கெஞ்சிக் கூத்தாடி தக்க வைத்துக்கொண்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னையில் தமது தலைமையில் நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்குப் பின் பேட்டியளித்த அவர், தி.மு.க. அணியில் உரிய சீட் கிடைக்காதவர்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

சட்ட விரோதமாக குட்கா விற்ற அ.தி.மு.க. போதைப் பொருள் புழக்கத்துக்கு எதிராக போராடுவது வேடிக்கையாக உள்ளது என்ற ஆர்.எஸ். பாரதியின் கருத்துக்கு பதிலளித்த ஜெயக்குமார், அ.தி.மு.க. ஆட்சியில் ஒன்றிரண்டு சம்பவம் நடந்திருந்தாலும், தவறு செய்தவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments