வழக்கில் சாட்சியம் சொல்லக் கூடாதென வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் வெட்டிக் கொலை

0 343

தூத்துக்குடியில், வழக்கில் சாட்சி சொல்லி விடக் கூடாது என்பதற்காக தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை கும்பல் ஒன்று சுவர் ஏறிக் குதித்து வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்தது.

பேண்ட் வாத்திய செட் தொழில் செய்து வந்த அமுதா நகரைச் சேர்ந்த கருப்பசாமியை அதேப்பகுதியைச் சேர்ந்த ராஜா, நவீன், ஆரோன் ஆகியோர் கடந்தாண்டு அரிவாளால் வெட்டியதாகவும், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் கருப்பசாமி விரைவில் சாட்சியம் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 1ம் தேதியன்று வழக்கில் சாட்சியம் அளிக்கக் கூடாதென கருப்பசாமியை இந்த கும்பல் மிரட்டிய நிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments