போலியோ சொட்டு மருந்து போடும் முகாம்களில் ஆய்வு செய்து, பின் தனது 3 மாத குழந்தைக்கு சொட்டு மருந்து போட்டுச் சென்ற திருவள்ளூர் ஆட்சியர்

0 402

காலை முதல் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து போடும் முகாம்களில் ஆய்வு செய்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், பின்னர் மனைவியுடன் வந்து தனது 3 மாத குழந்தைக்கும் சொட்டு மருந்து போட்டுச் சென்றார்.

போலியோ சொட்டு மருந்தை திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுபாஷினி ஆட்சியரின் மூன்று மாத குழந்தைக்கு வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 888 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட ஆயிரத்து 516 முகாம்கள் அமைக்கப்பட்ட நிலையில், அரசுப் பணிகளுக்கு இடையே ஆட்சியர் பிரபுசங்கர், தந்தை என்ற கடமையையும் ஆற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments