6 வயது சிறுவனை கடத்த முயன்றதாக வடமாநில இளைஞர் மீது சரமாரி தாக்குதல்

0 391

சென்னை வியாசர்பாடியில் நேற்று இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை கடத்த முயன்றதாக கூறி வட மாநிலத்தை சேர்ந்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

தாக்குதலில் காயமடைந்த அந்த நபர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குழந்தை கடத்தல் சம்பவம் உண்மையா? வாட்ஸ் ஆப்பில் வந்த வதந்தியால் ஏற்பட்ட குழப்பமா? என்பது குறித்து அந்த இளைஞரிடம் விசாரிக்க உள்ளதாக போலீசார் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments