அரசு திட்டங்களில் முறைகேடு.. வட்டார வளர்ச்சி அதிகாரி ஓய்வு பெறும் கடைசி நாளில் பணியிடை நீக்கம்..!
பல்வேறு அரசு திட்டங்களில் முறைகேடு புகாரில் சிக்கிய காங்கேயம் வட்டார வளர்ச்சி அதிகாரி ஹரிஹரன், ஓய்வு பெறும் கடைசி நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
குண்டடம் யூனியனில் 2022-2023 ஆம் ஆண்டில், சுமார் 4 ஆயிரத்து 217 சிமெண்ட் மூட்டைகள் விநியோகத்தில் முறைகேடு நடந்ததாக மற்றொரு புகாரில் ஹரிஹரன் உள்பட 2 பேர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு நடந்து வருகிறது.
Comments