குழந்தை கடத்த வந்ததாக சந்தேகப்பட்டு வடமாநிலத்தவர் மீது தாக்குதல்.. கோயிலுக்குள் வைத்து பூட்டு..!

0 324

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே குழந்தை கடத்த வந்ததாகக் கூறி வடமாநில இளைஞர் ஒருவரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கிய பொதுமக்கள், அவரை அருகிலிருந்த கோயிலுக்குள் வைத்து பூட்டினர்.

பரிக்கப்பட்டு, வஞ்சிவாக்கம், மெதூர் உள்ளிட்ட பகுதிகளில் வடமாநிலத்தவர் சிலர் குழந்தை கடத்த வந்துள்ளதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அதனை நம்பிய மக்கள், பரிக்கப்பட்டுக்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து கடத்த முயன்றதாகக் கூறி சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்து இளைஞரை மீட்ட போலீசார், கற்பனையான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவது, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்டவற்றைத் தவிர்த்து, காவல்துறையிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments