பே.டி.எம். பேமென்ட் வங்கியுடன் தொடர்பை துண்டிக்க ஒப்பந்தம்: பே.டி.எம்

0 418

பே.டி.எம். பேமென்ட் வங்கியுடனான தொடர்பை நிறுவன உள்ஒப்பந்தம் மூலம் கைவிடுவதற்கு பே.டி.எம். நிறுவனம் முடிவு செய்துள்ளது. விதிகளை மீறியதாக பே.டி.எம். பேமென்ட் வங்கி வருகிற 15ஆம் தேதிக்கு பிறகு டெபாசிட் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்திருக்கிறது.

இதையடுத்து, தனது பரிவர்த்தனைகளை மற்ற வங்கிகள் மூலம் மேற்கொள்ள தயார் என பே.டி.எம் தெரிவித்ததால், கோரிக்கை குறித்து பரிசீலிக்க தேசிய பரிவர்த்தனை நிறுவனமான N.P.C.L.க்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, யெஸ் பேங்க் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து சேவையைத் தொடர பே.டி.எம். திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments