தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்கள்

0 356

தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கிய நிலையில், தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு சிறப்பு தேர்வு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் தேர்வெழுதுவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அருணா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments