டெல்லியிலிருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ எடையுள்ள ரூ.50 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்

0 398

டெல்லியில் இருந்து மதுரைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிலமன் பிரகாஷ் என்பவர் சென்னையில் இருந்து புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பேக்குகளுடன் மதுரை ரயில் நிலையத்தில் இறங்கும்போது அதிகாரிகள் பிடித்து சோதனை செய்ததில் போதைப்பொருள் இருந்தது தெரியவந்துள்ளது.

டிஆர்ஐ அதிகாரிகள் டெல்லியில் இருந்து ரயிலில் பின் தொடர்ந்து வந்து மதுரையில் பிடித்து ரயில்வே காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments