இமாச்சலில் பாஜக சிறப்பாக செயல்படுவதாக மாநில காங். தலைவர் கருத்து

0 341

இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரசை விட களத்தில் பாஜக சிறப்பாக செயல்படுவதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் தெரிவித்துள்ளார்.

சிம்லாவில் பேட்டியளித்த அவர், எம்.பி.யாக தனது தொகுதிக்குச் சென்று மக்களிடம் பேசியபோது, பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் கருத்து கூறியதாக தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், காங்கிரஸ் அரசின் பணிகள் போதுமானதாக இல்லை என முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகுவிடம் தெரிவித்ததாகவும் பிரதீபா சிங் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments