தமிழகத்தில் +2 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்... சுமார் 8 லட்சம் பேர் பொதுத் தேர்வினை எழுத உள்ளனர்

0 229

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுகளை பள்ளி மாணவ, மாணவிகள், தனித் தேர்வர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என சுமார் 8 லட்சம் பேர் எழுத உள்ளனர். 

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வறைக்கு செல்லும் முன்னர் மாணவ, மாணவிகள் ஆசிரியரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராஜ்மல் மிஸ்ரிலால் ஜெயின் அரசுப்பள்ளி மாணவிகள், அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்ட அறிவிப்பில் தங்களுக்கான தேர்வு அறை எண்ணை சரிபார்த்தனர்.

திருச்சி சேவா சங்கம் பெண்கள் பள்ளியில் தேர்வெழுத செல்லும் தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர் நம்பிக்கையூட்டி வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

இராமநாதபுரத்தில் தேர்வெழுத செல்வதற்கு முன்பாக மாணவ, மாணவிகள் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments