அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்... மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

0 248

நடப்பாண்டில் ஒரு மாதம் முன்கூட்டியே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அதனை தொடங்கி வைத்தார்.

திருவல்லிக்கேணியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து அவர் வரவேற்றார்.

குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்போம்!எதிர்காலத்தை வளமாக்குவோம்!" என்ற விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு பள்ளியின் திட்டங்கள் குறித்து அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments