கேஸ் சிலிண்டர் வெடித்து தாய், 3 குழந்தைகள் கவலைக்கிடம்... கேஸ் ரெகுலேட்டரை சரியாக ஆஃப் செய்யாததால் விபத்து

0 535

செங்கல்பட்டில் கேஸ் ரெகுலேட்டரை முறையாக ஆஃப் செய்யாததால் எரிவாயு கசிந்து சிலிண்டர் வெடித்ததில், வீட்டில் இருந்த தாயும், மூன்று குழந்தைகளும் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிவருகின்றனர்.

பிகாரைச் சேர்ந்த ரோஜி குத்தூன் என்ற பெண், கணவர் வேலைக்கு சென்றதும், தமது 8 வயது மகள், 5 வயது மகன் மற்றும் 2 வயது குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.

திரும்பி வந்து வீட்டு கதவை திறந்து லைட் சுவிட்சை போட்டதும், சிலிண்டர் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த 4 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments