நிவாரண பொருட்கள் வாங்க வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு

0 403

காஸாவில், நிவாரணமாக வழங்கப்பட்ட கோதுமை மூட்டைகளை வாங்க வந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 104 பேர் உயிரிழந்தனர்.

760 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்த நபர்களை அவர்களது உறவினர்கள் கழுதை வண்டிகளில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

நிவாரண பொருட்களை சூறையாட முயன்றதாலேயே துப்பாக்கி சூடு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எகிப்து அரசும், ஜோர்டான் அரசும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments