கரூர், தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல்

0 228

மாநகராட்சியில் நடக்கும் முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பினாலும் மேயர் பதில் அளிக்கவில்லை என கரூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த அதிமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்தும், வாயில் கருப்புத் துணியை கட்டியும் வந்தனர்.

தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கவுன்சிலர்கள், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மக்களுக்கான எந்த திட்டமும் இல்லை எனக் கூறி சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்தனர். 

இதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தனது வார்டு குறித்த குறைகளை சொல்லிக்கொண்டிருந்த அமமுக கவுன்சிலர் கண்ணுக்கினியாள், மேயர் உரிய பதிலை அளிக்கவில்லை எனக் கூறி, வெளிநடப்பு செய்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments