லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

0 364

திருச்சியை அடுத்த மாத்தூர் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பாரதிதாசன் பல்கலைக் கழக மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

பல்கலைக் கழக விடுதியில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த வல்லரசு, சேலத்தை சேர்ந்த ரங்கநாதன், அரியலூரை சேர்ந்த லெனின் ஆகிய மூவரும் அதிகாலையில் ஒரே இருசக்கர வாகனத்தில் திருச்சிக்கு பயணித்தபோது விபத்தில் சிக்கினர்.

வல்லரசு, ரங்கநாதன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லெனின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விதியை மீறி ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக் கூடாது என்பதை இந்த கோர விபத்து உணர்த்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments