ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் வைத்த போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள்

0 415

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் தி.மு.க. முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக்கின் வீட்டுக்கு சீல் வைத்துள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், அவரது கார் ஓட்டுனரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விசாரணைக்கு ஆஜராகுமாறு மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டு கேட்டில் சம்மன் ஒட்டியும் ஜாபர் சாதிக் ஆஜராகததால், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனைக்குப் பின் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள், நிலம், வங்கி தொடர்பான ஆவணங்கள் பலவற்றை கைப்பற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜாபர் சாதிக்கின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் பட்டியலை எடுத்து தனித்தனியாக விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments