தூத்துக்குடி அருகே போக்சோ வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்த இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை

0 418

தூத்துக்குடி அருகே போக்சோ வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்த இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

முறப்பநாடு பகுதியைச் சேர்ந்த வடிவேல் முருகன் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன் 17 வயது சிறுமியைத் திருமணம் செய்ததால் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக பெண்ணின் தந்தை கூறியதால், இதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்தார். அப்போது, தெய்வச் செயல்புரம் பெட்ரோல் நிலையம் அருகே வழிமறித்த மர்ம கும்பல் வடிவேல் முருகனை வெட்டிக் கொலை செய்தது.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த கொலைக்கு பழிக்குப் பழியாக வடிவேல் முருகன் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY