வாகனப் பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் வீடு தேடி வரும்

0 488

வாகன பதிவுச்சான்று, ஒட்டுநர் உரிமம் ஆகியவற்றை விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பும் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் 91 வட்டார போக்குவரத்து மற்றும் 54 பகுதி அலுவலகங்களில் ஒப்பளிக்கப்படும் வாகன பதிவுச் சான்று மற்றும் ஒட்டுநர் உரிமம் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என்றும் நேரில் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையால் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பகுதி அலுவலகங்களுக்கு மக்கள் நேரடியாக வருவது கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments