வலிப்பு நோய் ஏற்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் -மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

0 232

வலிப்பு நோய் ஏற்பட்ட 9 மாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் 4 மணி நேரமாக மருத்துவர்கள் இல்லை எனக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குழந்தையை தூக்கிக் கொண்டு காலை 6 மணிக்கு அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில், செவிலியர்கள் மாத்திரை கொடுத்து காத்திருக்கும் படி கூறியதாகவும் 10 மணி வரை மருத்துவர்கள் யாரும் வரவில்லை என்றும் குழந்தையின் தந்தையான சேந்தங்குடியைச் சேர்ந்த ரத்தினகுமார் கூறினார்.

மறியலில் ஈடுபட்ட குழந்தையின் உறவினர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments