சென்னையில் குழந்தைகள் கடத்தல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்...

0 309

பிற மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபடுவதாக சமூக வளைதளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என சென்னை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

சந்தேக நபரைக் கண்டால், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும், வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூரில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில நபரை குழந்தை கடத்த வந்த நபர் என்ற சந்தேகத்தில் அப்பகுதி மக்கள் தாக்கியதை அடுத்து இந்த எச்சரிக்கையை போலீசார் விடுத்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments