லே லடாக் உறைபனி ஏரியில் நடத்தப்பட்ட மாரத்தான், மைனஸ் 30 டிகிரி குளிரில் ஓடிய தமிழக வீரர்

0 251

லே லடாக்கில் உள்ள பேன்காங் ஸோ உறைபனி ஏரியில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட மாரத்தானில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் 21 கிலோ மீட்டர் ஓடி பந்தய தூரத்தை கடந்துள்ளார்.

7 நாடுகளைச் சேர்ந்த 120 பேர் கலந்துகொண்ட அப்போட்டியில் சென்னையை அடுத்த மணிமங்கலத்தைச் சேர்ந்த மலையேறும் வீரரான திருலோகச்சந்திரன் தமிழகத்தில் இருந்து ஒரே வீரராக பங்கேற்றார்.

மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் புயல் வீசுவதையும் எதிர்கொண்டு பந்தய தூரத்தை கடந்ததாக திருலோகச்சந்திரன் கூறினார்.

அடுத்ததாக வரும் ஏப்ரல் மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments