சென்னை திருவொற்றியூரில் குழந்தையை கடத்துபவர் என நினைத்து வடமாநில இளைஞரை பொதுமக்கள் தாக்குதல்

0 380

சென்னை திருவொற்றியூரில் குழந்தையை கடத்துபவர் என நினைத்து வடமாநில இளைஞரை பொதுமக்கள் தாக்கினர்.

அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் குழந்தையை தாத்தா ராஜாகடை பகுதியில் உள்ள தூய பவுல் ஆலயம் அருகே இறக்கி விட்டுள்ளார்.

அப்போது, எதிர்புறத்தில் இருந்த வட மாநில இளைஞர் ஒருவர் குழந்தையை பார்த்து கையசைத்தாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் குழந்தையை கடத்துபவர் என நினைத்து அந்த இளைஞரை அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் பீகாரைச் சேர்ந்த அந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments