இது தான் 50 வருஷ நட்பாம்.. அதான் சால்வை பறந்துருக்கு.. மன்னிச்சிருங்கப்பா.. சிவகுமார்..!

0 1054

காரைக்குடியில் நடந்த  பழகருப்பையாவின் புத்தக வெளியீட்டு விழாவில் ஆசை ஆசையாய் பெரியவர் ஒருவர் கொடுத்த சால்வையை பிடுங்கி  கீழே வீசிய சம்பவம் தொடர்பாக நடிகர் சிவக்குமார் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காரைக்குடியில் நடந்த பழகருப்பையாவின் நூல் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்த நடிகர் சிவகுமார். பெரியவர் ஒருவர் கொடுத்த சால்வை பிடிங்கி வீசி எறிந்ததால் சர்ச்சை உருவானது

இந்த விவகாரத்துக்கு விளக்கம் அளிக்கும் அவையில் சால்வையை கொடுத்த நபரை சென்னைக்கு வரவழைத்து அவருடம் அமர்ந்து விளக்கம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சால்வை கொடுத்த நபர் தனது நண்பர் கரீம் என்றும் தங்களுக்குள் 50 வருடம் நட்பு இருப்பதாகவும் சிவகுமார் தெரிவித்த நிலையில் , தனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்ததே சிவகுமார் தான் என்று கரூம் தெரிவித்தார்

சிவகுமாருக்கு பொன்னாடை வாங்கிக் கொள்ளும் பழக்கம் இல்லை என்று தெரிந்தே தான் சால்வை வாங்கிசென்றது தவறு என்று கரீம் தெரிவித்த நிலையில், அவர் கொண்டு வந்த சால்வையை பிடுங்கி வீசியது தன்னுடைய தவறு என்பதை ஒப்புக் கொண்ட சிவகுமார் அதற்காக மன்னிப்புக்கேட்டு கொள்வதாக தெரிவித்தார்

ஏற்கனவே செல்போனை தட்டி விட்ட நிகழ்வின் போதும் சிவகுமார் இது போல மன்னிப்பு கேட்டது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments