ராங்ரூட்டில் காரை ஓட்டி போலீஸ் வாகனத்தை இடித்த சீரியல் நடிகை

0 674

குடிபோதையில் ராங்ரூட்டில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக சின்னத்திரை நடிகை மதுமிதாவை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியான நிலையில், புதிய காருக்கு பூஜை போட பிரத்தியங்கிரா தேவி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோதே விபத்து நடந்ததாக மதுமிதா விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 21ஆம் தேதி சோழிங்கநல்லூரில் ஒருவழிப்பாதையில் காரை ஓட்டிச் சென்ற மதுமிதா, இருசக்கர வாகனத்தில் வந்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவில் பணியாற்றும் காவலர் ரவிக்குமார் என்பவர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. 

இருப்பிரிவுகளில் வழக்கு பதிந்து அவரை கைது செய்து விடுவித்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், காரை பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments