5 எம்.பி.களை காணவில்லை , கண்டா வரச்சொல்லுங்க என்று சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் யார் என்று விசாரணை

0 564

காஞ்சிபுரம் எம்.பி. யாக திமுகவைச் சேர்ந்த செல்வத்தின் பெயரை குறிப்பிடமால் காணவில்லை என்று தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு எம்.பி.யாக மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தியின் பெயரையும் குறிப்பிடாமல், எம்.பியை காணவில்லை என்று குமாரபாளையத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தென்காசி எம்.பி.யான காங்கிரஸ் கட்சியின் தனுஷ் எம். குமாரையும் பெயர் குறிப்பிடமால் காணவில்லை என்று கூறி ராஜபாளையத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் எம்.பி., யாக முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி உள்ளார். இவரையும் காணவில்லை என்று முதுகுளத்தூர் உள்ளிட்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன

தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பழனிமாணிக்கத்தையும் பெயர் குறிப்பிடமால் , காணவில்லை என்று மன்னார்குடியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

5 தொகுதிகளில் எம்.பி.களை காணவில்லை என்று மக்கள் ஒட்டியது போன்று ஒரே நாளில் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் யார் ? என்று போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments