464 மில்லியன் டாலர் அபராதத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முறையீடு

0 216

சொத்து மதிப்பை அதிகரித்துக்காட்டி நிதி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் விதிக்கப்பட்ட 464 மில்லியன் டாலர் அபராதத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேல் முறையீடு செய்துள்ளார்.

நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த நீதிபதி ஆர்தர் எங்கோரோன், டிரம்ப் மற்றும் அவரது இரு மகன்களுக்கு அபராதமும் தங்கள் நிறுவனத்தில் இயக்குநர் பதவியை வகிக்க தடையும் விதித்தார்.

நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி நடந்துகொண்டதாகவும், உண்மைக்கு மாறாகச் செயல்பட்டதாக தனது மேல் முறையீட்டு மனுவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments