2002ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதம்... சீரமைத்துத் தர கிராம மக்கள் கோரிக்கை

0 224

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கண்ணக்கட்டை கிராமத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு அரசு சார்பில்  கட்டிக்கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

சில வீடுகளில் காரைகள் பெயர்ந்து விழுந்து விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே வீடுகளை சீரமைத்தோ அல்லது புதிதாகவோ கட்டிக்கொடுக்கவோ வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments