கஞ்சா கடத்திய ரௌடியின் காலுக்கு மாவுக்கட்டு

0 245

சென்னை கொடுங்கையூரில், வாகன தணிக்கையின் போது நிற்காமல் சென்ற காரை போலீஸார் துரத்திய போது காரை நிறுத்தி விட்டு சுவர் ஏறி குதித்த தப்ப முயன்ற ரவுடியின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து வாகன சோதனை நடத்தியதாகவும், எலும்பு முறிவு ஏற்பட்ட சரித்திர பதிவேடு ரவுடியான செபாஸ்டினை மருத்துவமனையில் சேர்த்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

விட்டுச் சென்ற காரில் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த அப்துல்ரகுமான் கைது செய்யப்பட்டதோடு, 24 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments