ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாஸோவில் தேவாலயத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழப்பு

0 285

ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாஸோவில் தேவாலயத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள எஸக்கினே என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது தீவிவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் நிகழ்விடத்திலேயே கொல்லப்பட்டனர்.

படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments