மாசி மகத்தையொட்டி வெகு விமரிசையாக நடைபெற்ற கோவில் திருவிழா.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

0 273

நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோவிலில் மாசி மகத்தையொட்டி வெகு விமரிசையாக நடைபெற்ற அப்பர் தெப்பத் திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நடைபெறும் மாசி திருவிழாவின் ஐந்தாம் நாளில் கருட வாகனத்தில் சுவாமி பொலிந்துநின்ற பிரானும், ஹம்ச வாகனத்தில் சுவாமி நம்மாழ்வாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

சென்னை குன்றத்தூர் முருகன் கோவிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழா, பல்லக்கு உற்சவத்துடன் நிறைவடைந்தது. காலையில் தீர்த்தவாரியும், மாலையில் மாட வீதிகளில் பல்லக்கில் உலாவந்த முருகப்பெருமானை அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத பௌர்ணமியையொட்டி 108 திருவிளக்கு சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments