பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்த பெண்ணைக் கைப்பிடித்த இளைஞர் படுகொலை.. 4 பேரை கைது செய்த போலீஸ்

0 520

சென்னை பள்ளிக்கரணையில், பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதலித்த பெண்ணை 4 மாதங்களுக்கு முன்பு மணம் முடித்த இளைஞரை பெண்ணின் அண்ணன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பள்ளிக்கரணை டாஸ்மாக் அருகில் நான்கு பேர் கொண்ட கும்பல் பிரவீண் என்ற இளைஞரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

குரோம்பேட்டை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே ஆம்புலன்சில் அவர் உயிர் பிரிந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், இருவேறு சமூகத்தினர் காதல் திருமணம் செய்த விவகாரத்தில்  கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் அண்ணன்  தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து பிரவீன் டாஸ்மார்க் கடை அருகே சென்றபோது மடக்கி சரமாரி வெட்டி படுகொலை செய்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 4 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments