ரஷ்ய ராணுவத்திற்கு உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்ட இந்தியர்களை விரைவில் விடுவிக்குமாறு ரஷ்ய அரசுக்கு இந்தியா கோரிக்கை

0 573

ரஷ்ய ராணுவத்திற்கு உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்ட இந்தியர்களை விரைவில் விடுவிக்குமாறு ரஷ்ய அரசுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

சுமார் 100 இந்தியர்கள் கடந்த ஆண்டு ரஷ்யாவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதில் சிலரை உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவர்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் ரஷ்யா-உக்ரைன் மோதலில் இருந்து விலகி இருக்குமாறும் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments