பாஜக ஆட்சிக்கு வந்தால் 3 ஆண்டுகளில் டாஸ்மாக் மூடப்படும் : அண்ணாமலை

0 522

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் மூன்றே ஆண்டுகளில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் முற்றிலுமாக அடைக்கப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்.

சங்கரன்கோவிலில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையை மேற்கொண்ட அண்ணாமலை, தென்காசி மாவட்டத்தின் முக்கிய கோரிக்கையான செண்பகவல்லி அணை உடைப்பை சரி செய்வதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த திமுக இதுவரை அதை நிறைவேற்றவில்லை என்றார்.

சங்கரநாராயண சுவாமி கோயிலுக்கு வெள்ளை அடித்து விட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments