ஆக்கிரமிப்பு அகற்றம் சார்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறிவுரை....

0 240

ஆக்கிரமிப்பு சார்ந்த ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரும் போது அந்த பொறுப்புக்குரிய அதிகாரியை மட்டுமே குறிப்பிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை செயலாளர், உள்துறை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

அப்போது, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவரின் பெயரை மட்டும் சேர்க்கக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments