வாரணாசி தொகுதியில் ரூ 13000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் இன்று தொடங்கி வைக்கிறார்: பிரதமர் மோடி

0 340

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இன்று 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகிறார்.

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பரிசளிப்பு விழா, நான்குவழிச் சாலைத்திட்டங்கள், எரிவாயு நிரப்பும் ஆலைகள் திறப்பு, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்துக் கொள்கிறார்.

ஞானத் துறவி ரவிதாசரின் 647வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நினைவிடத்திற்குச் சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்த உள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments