டெல்லி சலோ போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு... டெல்லி சலோ போராட்டம் 2 நாட்கள் நிறுத்தி வைப்பு

0 395

ஹரியானா பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் விவசாயி உயிரிழந்ததை அடுத்து, டெல்லி சலோ போராட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கக் கோரி பாட்டியாலாவில் நடந்த போராட்டத்தில் தலையில் காயமடைந்த விவசாயி சுப்கரன் சிங் என்பவர் உயிரிழந்தார்.

ஆனால் போலீசார் ரப்பர் தோட்டாவால் சுட்டதில் உயிரிழந்ததாக விவசாய அமைப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர். இந்நிலையில் டெல்லி சலோ போராட்டம் இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாகக் கூறியுள்ள விவசாய அமைப்பினர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை மாலை முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments