மேகதாது விவகாரத்தில் துரோகம் செய்துவிட்டது தி.மு.க. அரசு: இ.பி.எஸ்

0 420

மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு திராணி இருந்தால் கர்நாடகாவுக்கு எதிராக வழக்கு தொடரச் சொல்லுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர், மேகதாது விவகாரத்தில் தி.மு.க. அரசு தமிழகத்துக்கு இழைத்திருப்பது மிகப் பெரிய துரோகம் என்றார்.

அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளும் தி.மு.க. அரசு, மதுரையில் டைடல் பார்க் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு 2 ஆண்டுகள் ஆகியும் எந்த பணிகளையும் தொடங்கவில்லை என்று இ.பி.எஸ். குற்றம்சாட்டினார்.

தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கொந்தளிப்பாக இருப்பதாகவும், தி.மு.க. ஆட்சி நீடித்தால் ஆண்டவனால் கூட தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments