5-ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு அமைச்சர் அர்ஜுன் முண்டா அழைப்பு

0 333

டெல்லி எல்லையில் முற்றுகையிட்டுள்ள விவசாயிகளை 5-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய வேளாண்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார்.

இதுவரை நடந்த 4 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட விவசாயிகள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

தடுப்புகளை உடைத்து டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளின் முயற்சியை முறியடிக்கும் வகையில், ஜே.சி.பி., டிப்பர், ஹைட்ரா போன்ற கனரக வேளாண் கருவிகளை ஷம்பு எல்லையை நெருங்காமல் பஞ்சாப் போலீசார் தடுத்து வருகின்றனர்.

மறுபுறம், உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் உள்ள ஆட்சியர் அலுவலங்கள் முன்பு டிராக்டர்களுடன் திரண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments