லாட்டரி குலுக்கலில் அறிவிக்கப்பட்ட ரூ.2,800 கோடி பரிசை வழங்க மறுப்பு

0 699

அமெரிக்காவில் நடத்தப்பட்ட லாட்டரி குலுக்கலில் 340 மில்லியன் டாலர், அதாவது 2,800 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட டிக்கெட் எண், இணையத்தில் தவறாக பதிவானதாக கூறப்பட்டதால் டிக்கெட் வாங்கியவர் நீதிமன்றத்தை நாடினார்.

பவர்பால் லாட்டரி நிறுவனம் நடத்திய குலுக்கலில் தமது டிக்கெட்டுக்கு பரிசு கிடைத்ததை இணையம் வழியே பார்த்த ஜான் சீக்ஸ் என்பவர், அதனை செல்போனில் படமெடுத்து வைத்துக்கொண்டு அடுத்தநாள் நேரில் சென்று உரிமை கோரினார். ஆனால் பரிசை வழங்க நிறுவனம் மறுத்ததை அடுத்து, ஜான் சீக்ஸ், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments